கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச் சாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த்மிக்ஸ் கிட் வழங்கும் திட்டத்தில் முறைகேடு என்பது ஆதாரமற்றது. கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த்மிக்ஸ் கிட் வழங்கும் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் ஹெல்த்மிக்ஸ் கிட் வழங்கப்படாததால் அதற்கான நிதி மீண்டும் அரசிடம் அளிக்கப்பட்டது. மதர் ஹெல்த்மிக்ஸ் கர்ப்பிணிகளுக்கு உதவுமா என்பது கேள்வியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மதர் ஹெல்த்மிக்ஸ் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 32 பொருட்கள் அடங்கியது தான் மதர்ஸ் ஹெல்த்மிக்ஸ். சந்தையில் மதர் ஹெல்த்மிக்ஸ் டப்பா ஒன்றின் விலை ரூ.588 ஆக உள்ளது. டெண்டர் மூலம் மருத்துவத்துறை கொள்முதல் செய்ய உள்ள விலை ரூ.460 ஆகும். சந்தை விலையைவிட அதிகம் கொடுத்து வாங்கினால்தான் தவறு என கூற முடியும். ஒவ்வொரு டப்பாவுக்கும் ரூ.128 குறைவாக வாங்கியுள்ளதால் அரசுக்கு பணம் மிச்சமாகி உள்ளது. ஆவினில் உள்ள டயரி ஒயிட்னர் என்னும் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல. டி, காபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும்,என்றார்.
Tags:
#மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ்
# உலக சுகாதார அமைப்பு
# மருத்துவத்துறை
# அமைச்சர் மா.சுப்ரமணியன்