நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்களில் 95 வீதமான நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சில நீர்த்தேக்கங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் துறையின் கீழ் 263 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று (23) மாலை நிலவரப்படி, 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 34 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இலங்கை மின்சார சபையின் கீழ் உள்ள சமனல குளம் நீர்த்தேக்கம் 10 வருடங்களின் பின்னர் நேற்று (23) திறந்து விடப்பட்டதுடன் காசல் ரீ நீர்த்தேக்கம் 3 வருடங்களின் பின்னர் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.