வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்யேக இருக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யவும் பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் ஜன.18-ம் தேதி காலை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் மற்றும் பழமுதிர்ச் சோலை முருகன் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு சுற்றுலாப் பேருந்து சென்னை வந்தடையும்.