ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் ஒன்று ‘சந்தியா ராகம்’. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர் இன்று முதல், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் நாயகிகளில் ஒருவராக, தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தாரா. அவர் இந்த தொடரில் இருந்து தனிப்பட்டக் காரணங்களுக்காக வெளியேறிவிட்டார். அவருக்குப் பதிலாக பாவனா லஸ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.