மும்பை: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகியுள்ளார். ஹாரி புரூக் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக டான் லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.