மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்..!!

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்..!!
By: TeamParivu Posted On: May 21, 2022 View: 222


மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90% வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனத்தின் புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய மருந்துக்கு ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது; 

ஊசி மூலம் ஒரே முறை மருந்து செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20% வரை குறைய வாய்ப்பு உள்ளது. 2021 டிசம்பர் வரை உலகம் முழுவதும் 17,000க்கும் அதிகமான பெண்கள் இந்த மருந்து மூலம் பயனடைந்துள்ளனர் என சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:
# ரோஷ் நிறுவனம்  # மார்பக புற்றுநோய் மருந்து  # இந்தியா ‌‌  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..